இந்த கோவிட் வைரஸ் தொற்றிலிருந்து நாம் வெளியே வந்துகொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில், இவ்விதமான ஏற்றத்தாழ்வுகளை இப்போது நிவர்த்தி செய்வது முக்கியமானது.அதாவது ஒன்றாரியோவின் வேலைவாய்ப்புச் சட்டங்களை வலுப்படுத்துதல், ஆபத்து நிறைந்த வேலைகளுக்கு வழிவகுக்கும் இடைவெளிகள் மற்றும் ஓட்டைகளை மூடுதல், குறைந்த ஊதியம், பகுதி நேர வேலை மற்றும் பாதுகாப்பற்ற வேலைகளை உருவாக்குவதற்காக தொழில் வழங்குநர்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பு சலுகைகளை இல்லாமல் செய்தல்; சட்ட அமுலாக்கலை உறுதிசெய்து, முதலாளிமார் சட்டத்தை மீறும் போது அர்த்தமுள்ள அபராதங்களை விதித்தல் வேண்டும். தொழிலாளர் நடவடிக்கை நிலையத்தின் அங்கத்தவர்கள் காத்திரமான தந்திரோபாயங்களை உருவாக்கியுள்ளனர்.அவைகள் அமுல் செய்யப்படுமாக இருந்தால், அனைவருக்கும் கௌரவமான தொழில் ஒன்றைப் பெற்றுக் கொள்ள வழிகோலும்.
முன்னரங்க நிலைகளிலிருந்து: அறிக்கையின் சுருக்கம்
From the Frontlines: Report Summary in Tamil